டெல்லியைச் சேர்ந்த ‘ பெஜெயின்டில் ‘ என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க ஒரு சமூக பரிசோதனையை மேற்கொண்டார். இதற்காக அவர் பெண் போல ஆடை அணிந்து, தலை மற்றும் முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் சுமார் இரண்டு மணி நேரம் டெல்லி வீதிகளில் சுற்றிவந்தார்.
இந்த பரிசோதனையின் போது அவர் கண்ட காட்சிகள் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைளித்தன. வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே பெட்ரோல் பங்க் மற்றும் வீதிகளில் இருந்த பல ஆண்கள் அவரைத் தொடர்ந்து உற்றுப் பார்க்கத் தொடங்கினர். சிலர் வாகனங்களில் அவரைப் பின்தொடர முயன்றனர். மேலும், சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவரது வாகனத்தை மறிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், தனது நண்பர்கள் வீடியோ எடுப்பதைக் கண்ட பின்னரே விலகிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DdWhNe0z3DF/?utm_source=ig_web_button_share_sheet
இரண்டு மணி நேரத்திற்குள் பைக், ஆட்டோ, கார் என பலதரப்பட்ட வாகனங்களில் சென்றவர்களும் தன்னைப் பின்தொடர முயன்றதாகக் கூறிய அவர், சூழ்நிலை மிகவும் பயமாக மாறியதால் பரிசோதனையைப் பாதியிலேயே நிறுத்தினார். “இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்வது பாதுகாப்பற்றது, அவர்களின் வாழ்க்கை உண்மையிலேயே மிகவும் கடினமானது” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ, டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும் மீண்டும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…