நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் உள்ள தனது தேனீர் கடையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சுரேந்தர் கோலி, நொய்டாவின் நிதாரி கிராமத்தில் தொழிலதிபர் மோனிந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்பவராகப் பணியாற்றி வந்தார். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த வீட்டின் அருகிலுள்ள சாக்கடையிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. சிபிஐ விசாரணையில் கோலி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்குக் கீழமை நீதிமன்றங்களால் மரண தண்டனை வரை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இருப்பினும், போதிய மற்றும் நம்பகமான ஆதாரங்கள் இல்லாததால் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2023-இல் பல வழக்குகளில் இவரை விடுவித்தது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் 2025-இல் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளிலிருந்தும் இவரை விடுவித்து உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. சுமார் இரண்டு தசாப்தங்களாகச் சிறையில் கழித்த பிறகு விடுதலை செய்யப்பட்ட கோலி, ஹரித்வாரில் தேனீர் கடை நடத்தி வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…
தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…