“திடீரென அமைச்சர் காலில் விழுந்த வாலிபர்”…. ஈரோடு புத்தகத் திருவிழாவில் பரபரப்பு…. அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் காலில் விழுந்து, இளைஞர் ஒருவர் விருதுநகரில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சாதியக் கொடுமைகளை ஒழிக்கப் பல்வேறு சட்டங்களும் நடவடிக்கைகளும் நடைமுறையில் இருந்தாலும், கள அளவில் சாதிய பாகுபாடுகளும் மோதல்களும் தொடர்கதையாகவே இருக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில், பட்டியலின மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பொதுப்பாதையை மறித்துக் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரால், குழந்தைகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை நிலவி வருகிறது. இச்சூழலில், எதிர்பாராமல் தம் காலில் விழுந்த இளைஞரை உடனடியாக எழுப்பிய அமைச்சர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் காகிதத்தில் மட்டும் இல்லாமல், நடைமுறையிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.