கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிக்கப்பனவரா பகுதியில் மகளிர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண் மருத்துவர் ஒருவர் பணி முடிந்து இரவில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் விடுதியில் வாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெண் மருத்துவரிடம் வழி கேட்பது போல பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அவரை தவிர்த்து விட்டு அந்தப் பெண் மருத்துவர் விடுதியின் வெளிக் கதவை திறக்க முயற்சி செய்தார்.
அப்போது அந்த வாலிபர் பெண் டாக்டரை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பிறகு இது குறித்து அந்தப் பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் ராகேஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…
புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…
தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…
தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…