SIR பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடமாறி சென்றவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். அதன்படி இந்த சிறப்பு முகாம் முதல் கட்டமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனவரி 3 நேற்று சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இன்றும் முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் விரைந்து சென்ற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். ஆன்லைன் மூலமாக அல்லது அந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நேரில் சந்தித்து இன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…