உங்க ஆதார் கார்டு வேற யாராவது யூஸ் பண்றாங்கன்னு சந்தேகமா?… இதோ செக் பண்ண எளிய வழி..!

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் தற்போது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நம்முடைய ஆதார் கார்டை ஒரு சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

அப்படி உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால் myAadhaar என்ற போர்டலுக்கு சென்று மொபைல் எண்ணுடன் லாகின் செய்ய வேண்டும். மெனுவில் Authentication History என்பதை தேர்ந்தெடுத்து உங்களின் ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய தேதி வரம்பை தேர்வு செய்து பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள். அப்படி சந்தேகமான செயல்பாடு ஏதாவது தெரிந்தால் 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்து அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.