உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனம்பெண் ஒருவர் கான்ஸ்டபிளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். ஆனால் அந்த காவலர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் அவரை பொய்யான வழக்கில் சிக்க வைத்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட காவலர் ஷிகோஹாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காவலரை வற்புறுத்தியபோது, காவலர் அவளை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.
மேலும் அவரின் கோரிக்கைகள் ஏதேனும் நிறைவேற்றப்படாவிட்டால், கான்ஸ்டபிளை கொன்றுவிடுவதாகவோ அல்லது போலி வழக்கில் சிறையில் அடைக்கவோ அப்பெண் குடும்பத்தோடு சேர்ந்து மிரட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் 9 மாதங்களுக்குப் பிறகு ஷிகோஹாபாத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே, ஹடாப்சர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, இரும்புச்…
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர் நிறுத்தம் ஒருவேளை முறிந்தால், ஈரானின் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துத்…
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ராகவ் சதா, அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது…