ராஜஸ்தான் மாநிலம் கிசான் கார்க் பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பல்வேறு இடங்களில் திருமணம் செய்வதற்காக வரன் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு மணப்பெண் அமையவில்லை. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு ஜிதேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமண புரோக்கர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஜிதேந்திரா ஆக்ராவை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்தின்போது ஜிதேந்திரா 2 லட்ச ரூபாய் பணத்தை கமிஷனாக வாங்கியுள்ளார். இந்த நிலையில் முதலிரவு சமயத்தில் இளம்பெண் இன்று முதலிரவு வேண்டாம். எங்கள் பாரம்பரிய படி முதல் இரவில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருக்கக் கூடாது என கூறியுள்ளார். அதற்கு மாப்பிள்ளை சம்மதம் தெரிவித்த பிறகு இருவரும் தனித்தனியாக படுத்து தூங்கினார்.
பின்னர் 3 மணிக்கு தண்ணீர் குடிப்பதற்காக மாப்பிள்ளை கண்வழித்து பார்த்தபோது தனது மனைவி காணாமல் போனதை கண்டு வாலிபர் அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் இருந்த நகை பணமும் மாயமாக இருந்தது. இதுகுறித்து வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புதுப்பெண்ணையும் ஜிதேந்திராவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் என்ற பெயரில் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…