கோவையில் இருகூர் அருகே நேற்று இரவு காரில் இளம்பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஏர்போர்ட் பின்புறம் கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள.து இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.
மேலும் கடத்தப்பட்ட இளம் பெண் யார்? இளம் பெண்ணை கடத்தியது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் காரணமாக 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
