உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில், வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் 18 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னா சரோஜ் என்பவரது மகள் லட்சுமிக்கும், ஒரு இளைஞருக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.
மேலும் இதற்கிடையில் லட்சுமி தனது வருங்கால கணவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே இவ்வாறு பேசுவது சரியாக இருக்காது எனக் கூறி அவரது தாய் அவரைக் கண்டித்துள்ளார். தாயின் கண்டிப்பால் மிகுந்த மனவேதனை அடைந்த லட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்ய முயன்றனர். ஆனால், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஆணைகளை ரத்து செய்து, திட்டங்களின்…
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…