பெங்களூரை சேர்ந்த புஷ்பவதி(26) என்பவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு புஷ்பவதிக்கு வேணு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புஷ்பவதி 8 நிமிட வீடியோ ஒன்றை ரெக்கார்ட் செய்து விட்டு அப்பகுதியில் உள்ள அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமான நாளிலிருந்து வேணு புஷ்பவதியை விட்டு விலகி அவருடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு புஷ்பவதியை துன்புறுத்தி உள்ளனர் மேலும் குழந்தை வேண்டுமென்றால் கணவரின் சகோதரன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள் என கூறியதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் வேணுவின் சகோதரரும் மன ரீதியாக புஷ்பவதியை தொந்தரவு செய்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேணு குடும்பத்தினர் புஷ்பவதியை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என மிரட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலில் புஷ்பவதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த நாகேந்திரா 30 என்பவரும், 23 வயதுடைய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநரான இளம் பெண் ஒருவரும் கடந்த…
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் மனைவியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற வாலிபர், அண்மையில் காலமான தனது மாமியார்…
நியூயார்க்கில் தீயணைப்பு வீரராகப் பயிற்சி பெற்று வரும் ஒரு நபர், தனது காதலிக்கு மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு…
மத்திய அமைச்சரவையை அதிரடியாக மாற்றிமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன்படி, 10-க்கும் மேற்பட்ட…