தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கே.பி.எச்.பி காவல் எல்லைக்குட்பட்ட ஃபேஸ்-6 பகுதியில் அமைந்துள்ள பஞ்சவடி அபார்ட்மெண்ட்டில் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சீதல் (32) என்பவர், தனது கணவர் சோனு புருஷோத்தமன் மற்றும் 4 வயது மகளுடன் அந்த குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். கணவர் எஸ்பிஐ வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
சீதல் கடந்த சில காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவச் சிகிச்சைகளை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலையில் குடியிருப்பின் மாடிப் பகுதிக்குச் சென்ற அவர், எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த கே.பி.எச்.பி போலீசார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…