கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்த லிங்கபுரத்தை சேர்ந்த மிக்கேல் சேவியர் (48) என்ற டெய்லர் தற்போது குடும்பத்துடன் கங்கா நகர் முதல் தெருவில் வசித்து வருகின்றார். இவருடைய மகள் லிவினா(21) பிஎஸ்சி பட்டதாரி. இவர் பகுதி நேரமாக ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையையும் தேடி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் லிவினா மற்றும் அவருடைய சகோதரி ஷைனி ஆகியோர் மட்டும் வீட்டிலிருந்து உள்ளனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரி ஷைனி அறையின் கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தார். அப்போது அறையில் லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீசார் செல்போனில் சிம் கார்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே விசாரணையை தொடங்கியுள்ளனர். திடீரென இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…