உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இரண்டு இளைஞர்கள் ஒரு தெரு நாயை தங்கள் பைக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு ஆண்கள், தெரு நாயின் கைகால்களை கயிற்றால் கட்டி, மறு முனையை மோட்டார் சைக்கிளில் இணைத்து, நாயை சாலையில் இழுத்துச் செல்லும் அதே வேளையில், மற்றொரு நாய் அவர்களைத் துரத்துவதைக் காணலாம்.
अलीगढ़
➡बेजुबान कुत्ते के साथ क्रूरता का वीडियो
➡बाइक से बांधकर कुत्ते को खींचकर ले गए
➡जीव दया फाउंडेशन ने थाने में दी तहरीर
➡कुत्ते को खींचने वालों पर कार्रवाई की मांग
➡थाना सासनी गेट इलाके की घटना.#Aligarh @aligarhpolice pic.twitter.com/Z1bdNIAbMI— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 10, 2025
அலிகரின் சசானி கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது . இதனையடுத்து ஜீவ் தயா அறக்கட்டளை என்ற விலங்கு உரிமைகள் அமைப்பு, நாய் மீது கொடூரமாக நடந்து கொண்டதற்காக அந்த ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
