கிரேட்டர் நொய்டா தாதரி பகுதியில் நடந்த துயரமான ரயில் விபத்து ஒரு இளைஞரின் உயிரை காவு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் மூன்று மணி அளவில் அப்பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ததாவலி கிராமத்தை சேர்ந்த துஷார் (19) என்பவர் ஓம் பிரகாஷின் மகன் ஆவார். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அவர் பைக் ஓட்டி வந்தபோது மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீறி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. மண்பாதையில் பைக் வழுக்கி விழுந்ததால் அவர் தனது பைக்கை மீண்டும் தூக்க முயன்றார்.
ஆனால் அதே சமயம் வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. தப்பிக்க முயன்றும் முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீறி யாரும் செல்ல வேண்டாம் எனவும் சிறிய அலட்சியம் கூட உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த துயரமான சம்பவம் ரயில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும்,…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்று பத்து நாட்களைக் கடந்த நிலையிலும், சென்னை மாநகராட்சி மேயர்…
தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், அவர்தம் அதிரடியான மக்கள் நலத் திட்டங்களும் கார்ப்பரேட்…
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…