மும்பை போவாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 25 வயது விமானப் பணிப்பெண் ஒருவரின் வீட்டிற்குள், ‘கண் திருஷ்டி’ கழிப்பதாகக் கூறி திருநங்கை போல வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், வீட்டில் பெண் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அனில் ஷிண்டே (28) என்ற நபர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிறகு, அவரிடமிருந்து 200 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு அனில் ஷிண்டே தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போவாய் காவல் துறையினர் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கல்வா குடிசைப் பகுதியில் ஒளிந்திருந்த அனில் ஷிண்டேவை 4 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான நபர் மீது பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட்…
ஹைதராபாத்தில் உள்ள துர்க்கம் செருவு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு வெளியே, செப்டம்பர் 17…
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…
இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…