திருநெல்வேலி மாவட்டம் எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ரெஜினா(43). இந்த தம்பதியினருக்கு கொம்பையா(22), வினோத்(13) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி உயிரிழந்தார். இந்த நிலையில் ரெஜினாவுக்கும் அதே பகுதியில் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த கொம்பையா தனது தாயை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் பரப்பாடி அருகே தாமரைக் குளத்தில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்கு கொம்பையா சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். அப்போது ரெஜினா தனது கள்ளக்காதலனுடன் அலங்கோல நிலையில் இருந்ததை கண்டு கொம்பையா அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் தாய் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கொம்பையா சைக்கிளுக்கு காற்று அடிக்க பயன்படுத்தும் இரும்பு பம்பை எடுத்து ரெஜினாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதனால் ரத்த வெள்ளத்திலேயே அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெஜினாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…