பீகார் மாநிலம் தர்பங்காவில், சரக்கு ரயில் ஒன்றின் கூரை மீது ஏறிய இளைஞர் ஒருவர், மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியைத் (Overhead wire) தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கோரச் சம்பவம் அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வாலிபர் ரயிலின் மேலே ஏறி நின்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் கீழே இறங்குமாறு சத்தமிட்டு எச்சரித்துள்ளனர். ஆனால், எதையும் காதில் வாங்காத அந்த இளைஞர், ஆபத்தை உணராமல் ரயிலின் கூரை மீது நடந்து சென்றுள்ளார்.ஒரு கட்டத்தில் அவர் தன் கையை உயர்த்தி, மேலே சென்ற மின்சாரக் கம்பியைத் தொட்டுள்ளார். தொட்ட அடுத்த நொடியே பலத்த சத்தத்துடன் மின்சாரம் பாய்ந்து தீப்பொறி பறந்தது. மின்சாரம் தாக்கிய வேகத்தில் அந்த இளைஞர் ரயிலின் கூரை மீதே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
பலியான இளைஞர் யார்? எதற்காக ரயிலின் மேல் ஏறினார்? என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனச் சிலர் சந்தேகிக்கின்றனர். ரயில்வே காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே உலையாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…