இளம் பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு அதன் பிறகு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி ஜோதி குமார். 30 வயதான இவர் நீலாங்கரையில் உள்ள மருத்துவமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் பாலவாக்கத்தில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்தில் வேலை செய்த போது 29 வயது இளம்பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பழக்கமானது காதலாக மாற ரிஷி ஜோதி குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். பின்பு கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு கருகலைப்பு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இளம் பெண் கூறிய புகார் உண்மை என்பது தெரிய வந்த நிலையில் ரிஷி ஜோதி குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
