திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பூங்காவில் அமலா வெர்ஜினா என்ற இளம் பெண், அவரது காதலன் நவீன் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன், அமலாவின் கழுத்தை அவர்து துப்பட்டாவாலேயே இறுக்கி, அருகில் கிடந்த பெரிய கல்லால் அவரது முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
அமலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், நவீனைத் தப்பியோட விடாமல் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நவீனை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரத் தாக்குதலில் முகத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அமலா வெர்ஜினா, மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின்…
நொய்டாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பொது இடங்களில் சண்டையிடும்போது நிலவும் குழப்பமான சூழலையும், வன்முறையின் எதிர்மறையான வெளிப்பாட்டையும் காட்டுகிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க திமுக கடுமையாகப் போராடிய போதிலும், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டுள்ளது.…
உத்தரப்பிரதேசத்தில் 7-8 வயது சிறுவனைத் திருட்டு வழக்கில் காவல் ஆய்வாளர் இழுத்துச் செல்லும் காட்சி, மனிதநேயமற்ற செயலாகவும், சட்டம் மற்றும்…
திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…