“ஐயோ அங்கிள் விட்ருங்க”… 5 வயது பிஞ்சு குழந்தையை கதற கதற சீரழித்து, கொடூரமாக கொன்ற 32 வயது வாலிபர்… நாட்டையே உலுக்கும் கொடூரம்….!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தாலுகா பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவேளை நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காணாமல் போனார். உடனே பெற்றோர் பல இடங்களில் சிறுமியை தேடி நிலையில் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று சிறுமி வீட்டு அருகே பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சிறுமியின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் 32 வயது வாலிபர் ஒருவரின் அடையாளம் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பலாத்காரம் செய்ததும், மேலும் நடந்ததை வெளியே சிறுமி சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அவர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளது.