பிசியோதெரபி பயிற்சிக்குச் சென்ற மாணவி… குளிர்பானத்தில் மயக்க மருந்து… ஹோட்டல் அறையில் அந்தக் காலத்தில் மயங்கி கிடந்த பெண்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஷாலினி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் பயிற்சிக்காக பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான கார்த்திகேயன் (27) என்பவர் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு மாணவிக்கு பயிற்சி அளித்த மருத்துவர் கார்த்திகேயன் பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று காலை 6 மணி அளவில் இளம்பெண் வேலை செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் கார்த்திகேயன் ஷாலினிக்கு போன் செய்து ஒரு மணி அளவில் சில வீடுகளுக்கு சென்று பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி இளம் பெண் நேற்று 11 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில் இரண்டு வீடுகளுக்கு சென்று பிசியோதெரபி செய்தார். பின்னர் ஒரு பெண்ணுக்கு பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறி ஷாலினியை அவருடைய காரில் ஏற்றி சென்றுள்ளனர்.

   

அப்போது காரில் இருந்த குளிர்பானத்தை எடுத்து கார்த்திகேயன் ஷாலினியிடம் குடிக்க வைத்துள்ளார். மருத்துவர் தானே என நம்பி குடித்த ஷாலினி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து கார்த்திகேயன் ஷாலினியை கொளத்தூர் ஜெயந்தி நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பிறகு மயக்கத்தில் இருந்து விழித்த அந்தப் பெண் தனது நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு எழுந்து தன்னுடைய உடைகளை சரி செய்து கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியே வந்து தனது அக்காவுக்கு போன் செய்து நடந்ததை கூறினார்.

   

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.