அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது நிலைப்பாட்டைத் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார். விஜய், தனுஷ் போன்ற திரைநட்சத்திரங்கள் அரசியல் களத்தில் தீவிர ஆர்வம் காட்டி வரும் தற்போதைய சூழலில், அரசியலுக்கு வர விரும்புபவர்கள் தாராளமாக வரலாம் என அவர் தெரிவித்தார். அதே சமயம், அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற கட்டாயமில்லை என்றும், எங்கிருந்து வேண்டுமானாலும் மக்கள் பணியைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், மாணவர்களின் நியாயமான போராட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் பதிவு செய்தார்.

தன்னுடைய திரைப்பயணத்தைப் பொறுத்தவரை, அடுத்ததாக வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் தனது திரை வாழ்க்கையில் ஒரு சிறப்பான திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுதவிர, சொந்தத் தயாரிப்பில் ‘ப்ரோ கிளப்’ மற்றும் யோகி பாபுவை வைத்து தான் இயக்கி வரும் ‘ஆர்டினரி மேன்’ ஆகிய படங்களின் வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். ‘ஜெயம்’ படம் முதலே தனக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களைத் தொடர்ந்து சந்திக்க முடியாமல் போனதாகவும், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி மூலம் இனி ரசிகர்களைத் தொடர்ந்து சந்திக்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.