முந்தைய காலகட்டத்தில் நம் தாத்தா பாட்டி வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது. அவர்கள் சேமிப்பு இல்லை என்றாலும் கூட வாழ்க்கையை நிம்மதியான முறையில் நல்ல முறையில் நடத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் விலைவாசி உயர்வுக்கு தகுந்தார் போல் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கையில் சேமிப்பு இல்லை என்றால் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான்.

ஆனால் பலருக்கு குறைந்த வருமானம் இருக்கலாம். அந்த குறைந்த வருமானத்தில் எப்படி சேமிப்பது எப்படி திட்டமிடுவது என்பது தெரியாமலே இருக்கிறார்கள். உண்மையில் திட்டமிட்டு வாழ்க்கை வாழும் போது நம்மால் நல்ல முறையில் பணத்தை சேமிக்க முடியும். இப்படி குறைந்த வருமானத்தில் நிறைய சேமிப்பு பெறுவதற்கு மக்களுக்கு கிடைத்த வர பிரசாதம் தான் இந்த மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP என்ற முதலீட்டு திட்டங்கள். இந்த முதலீட்டு திட்டத்தில் தினமும் 10 அல்லது 20 ரூபாய் சேமிக்கும் போது நீங்கள் கோடிக்கணக்கில் சேமிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இனி காண்போம்.
SIP முதலீட்டில் தினமும் 10 முதல் 20 ரூபாய் சேமிப்பதன் மூலம் நீங்கள் பணக்காரர் ஆகலாம். இதற்கு நீண்ட காலம் முதலீடு மட்டுமே தேவை. தினமும் ரூபாய் 10 சேமித்தால் மாதம் ரூபாய் 300 ஆகிவிடும். இதனை மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையில் முதலீடு செய்யும்போது 35 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 300 நீங்கள் SIP செய்து அதில் 18% வருமானம் பெற்றால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் 1.1 கோடி ரூபாய் இருக்கும்.
இன்று அனைவராலும் ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இப்படி நீங்கள் முதலீட்டை திட்டமிட்டு செய்யும் போது நீங்கள் கோடீஸ்வராராக ஆகலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் இளமை வயதிலேயே முதலீட்டை தொடங்க வேண்டும். அப்படி தொடங்கினால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்குகிறார்களோ அவ்வளவு எளிதாக இலக்கை அடையலாம்.

ஒரு 20 வயது இளைஞன் தினமும் 30 ரூபாயை SIP க்கு எடுத்து வைக்க முடிந்தால் ஓய்வு பெறும்போது அதாவது 60 வயதுக்கு பிறகு 12 சதவீதம் வருமானம் கிடைத்தால் கூட ரூபாய் 1.07 கோடி நிதி திரட்டலாம். இதில் முதலீடு செய்ததை பார்க்க போனால் வெறும் 4,32,000 மட்டுமே முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கான பலன் அதிக அளவு இருக்கும். இப்படி நீங்கள் திட்டமிட்டு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP போன்றவற்றின் ரிஸ்க்களையும் கண்டறிந்து அதன் நல்வழிகளை பின்பற்றி சேமிக்கும் போது உங்களால் எளிதாக பணக்காரராக கோடீஸ்வரராக மாற முடியும்.
