ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாக போர் மேற் கொண்டு வருகிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் காபி, டீ மற்றும் உணவு வகைகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும், இரண்டு வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு தினமும் இரண்டு பிரியாணி வழங்கப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுவரை இரண்டு பேர் வணிகச் சிலிண்டர்களை கொடுத்து தினமும் பிரியாணி வாங்கி செல்கின்றனர் என்று ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
