CINEMA
“நீ ஆம்பளையா இருந்தா இதை பண்ணு..” விஜயகாந்தை திட்டிய வடிவேலு.. நேரடியாக வடிவேலுக்கு சவால்விட்ட பிரபல நடிகர்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து, நல்ல அரசியல்வாதியாகவும் திகழ்ந்து ,மாமனிதனாக இவ்வுலகை விட்டு மரணம் அடைந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய மரணம் அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரையும் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது என்றே கூறலாம். ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாரி வாரி வழங்கியவர். எந்த ஒரு மனிதனும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர். தன்னை தேடி வந்தவர்களை சாப்பிடாமல் இவர் ஒரு பொழுதும் அனுப்பியது கிடையாது. இப்படி திரையுலகில் மட்டுமின்றி அனைவருக்கும் பல்வேறு உதவி செய்த இவரின் நினைவுகள் தற்போது இணையத்தில் நடிகர்கள், நடிகைகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு தனது வாழ்க்கையில் செய்த நல்ல விஷயங்கள் பற்றி கூறியிருந்தார். இப்படி ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் வாழ்க்கையிலும் ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இந்நிலையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் வைகைப்புயல் வடிவேல் அவர்கள் தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்த்தின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவும் இல்லை. ஏன் இதுவரை ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை.
இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் வெளியிட்ட சில தகவல்களை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பகிர்ந்து வடிவேலுவை காட்டமாக பேசியுள்ளார் அதன்படி பொன்னம்பலம் இந்த பேட்டியில் கூறியிருந்ததாவது, ‘ ஆரம்பத்துல நல்லவனாத்தான் இருந்தான். வளர்ற வரைக்கும் எல்லார் கால்லயும் விழுந்தான். சுந்தர் சி.யின் ‘நகரம்’ படத்தில் அவனோடு நடித்தேன். அப்போது டயலாக் பேப்பரில் இல்லாத ஒரு வசனத்தை பேசினேன். அதில் விஜயகாந்தை கிண்டல் செய்தான்.
‘வடிவேலு. அவரை தப்பா பேசாத. உனக்கு அவரை பிடிக்கவில்லை என்பதற்காக.. என்னை வைத்து அவரை திட்டாதே. நீ ஆம்பளையா இருந்தா அவர் வீட்டு வாசலுக்கு போய் அவரை திட்டு’ என்றேன். எனக்கு வாழ்வளித்த கேப்டனை என் முன்னாலேயே திட்டினால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?” என்று பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு..
வடிவேலு பற்றி பொன்னம்பலம்:
ஆரம்பத்துல நல்லவனாத்தான் இருந்தான். வளர்ற வரைக்கும் எல்லார் கால்லயும் விழுந்தான்.
சுந்தர் சி.யின் ‘நகரம்’ படத்தில் அவனோடு நடித்தேன். அப்போது டயலாக் பேப்பரில் இல்லாத ஒரு வசனத்தை பேசினேன். அதில் விஜயகாந்தை கிண்டல் செய்தான்.
‘வடிவேலு. அவரை தப்பா பேசாத.… pic.twitter.com/p8oyelO1nq
— Blue Sattai Maran (@tamiltalkies) December 30, 2023