மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் தன் மகனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மணமகளின் தந்தையுடன் 45 வயதான திருமணமான பெண் ஒருவர் ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிராமத்தில் 45 வயது பெண்ணின் மகனுக்கும் 50 வயதுடைய நபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண நிச்சயம் முடிந்த பிறகு மணமகனின் தாய்க்கும் மணமகளின் தந்தைக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண் ஒரு வாரம் காணாமல் போனதால் குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் தன்னுடைய மகனுக்கு சம்மந்தியாக இருந்தவருடன் விருப்பப்பட்டு ஓடி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான இருவரும் தாங்கள் காதலிப்பதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இருவருமே வயது வந்தவர்கள் என்பதால் இது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறி போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பெற்ற மகனையும் மகளையும் ஏமாற்றிவிட்டு வயதான ஜோடி திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…