Categories: சினிமா

இந்தி சினிமாவில் என்னை வச்சு செஞ்சுட்டாங்க.. ஆளைவிட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்.. கௌதம் மேனன் புலம்பல்..

Spread the love

தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்குப் பிறகு உயர் மத்தியதர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் ஸ்டைலிஷாக படமாக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌதம் மேனன். அவர் மாதவன், ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.

அதன் பின்னர் அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றன. தன்னுடைய சில ஹிட் படங்களை அவர் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தார்.

அப்படி தன்னுடைய முதல் படமான மின்னலே படத்தை இந்தியில் மாதவன் மற்றும் சாயிப் அலிகான் ஆகியோர் நடிப்பில் ரீமேக் செய்தார். இந்த படத்தை வாஷு பக்னானி தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்தை இயக்க கௌதம் மேனன் விரும்பவில்லையாம். ஆனால் மாதவன்தான் பெரிய தயாரிப்பாளர் என சொல்லி அவரை சம்மதிக்கவைத்துள்ளார்.

படத்தை இயக்கிய போது மும்பையில் நடப்பது போன்ற கதையை டர்பன் நகரில் வைத்து ஷூட் செய்து மேட்ச் செய்ய சொல்லியுள்ளனர். இது கௌதம் மேனனுக்கு பிடிக்கவில்லையாம். ஆனால் வெளிநாட்டில் ஷூட் வைத்தால்தான் சைஃப் அலிகான் ஒழுங்காக ஷூட் வருவார் என்று சொல்லி அழைத்து சென்றுள்ளனர்.

படத்தில் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இருந்த 6 பாடல்கள் இல்லாமல் வேறு 6 பாடல்களையும் அவரே சென்று ஷூட் செய்துள்ளார். ஏனென்று கேட்டால் பாடல்களுக்கு என்று மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது என சமாதானம் சொல்லியுள்ளனர்.

இது எதுவுமே பிடிக்காமல்தான் கௌதம் அந்த படத்தை எடுத்துக் கொடுத்தாராம். எப்படியாவது படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஆளைவிட்டால் போதுமென்றுதான் ஓடிவந்தாராம். எதிர்பார்த்தது போலவே அந்த திரைப்படம் ஹிட்டாகவில்லை. அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கான ஏக் தீவானா தா என்ற படத்தை ரீமேக் செய்தார். அந்த படமும் சரியாக போகவில்லை.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago