மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நெமிசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் (என்ற) ‘எல் மென்ச்சோ’, பிப்ரவரி 22, 2026 அன்று மெக்சிகோ ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா (Tapalpa) நகரில் நடந்த இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், மெக்சிகோ சிட்டிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். அமெரிக்க அரசு இவரைப் பிடிக்க 15 மில்லியன் டாலர் வெகுமதி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்மட்டத் தலைவனின் மரணத்திற்குப் பதிலடியாக, மெக்சிகோவின் குறைந்தது எட்டு மாநிலங்களில் போதைப்பொருள் கும்பல்கள் கடுமையான வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. ஆயுதமேந்திய கும்பல்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், சாலைத் தடைகளை ஏற்படுத்தியும் ராணுவத்தினருடன் மோதி வருகின்றனர். இதனால் குவாடலஜாரா மற்றும் புவேர்ட்டோ வல்லார்ட்டா போன்ற முக்கிய நகரங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; மேலும் பல நாடுகளில் இருந்து மெக்சிகோ செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
