மகளிர் உரிமைத்தொகை: டிசம்பர் 12ஆம் தேதியில் ரூ.1000 கிடைக்காவிட்டால்… உடனே இதை செய்யுங்க… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர்.
மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கி வரும் நிலையில், இந்த திட்டத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் தொகை வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண்கள் அந்தந்த தொகுதி கோட்டாட்சியர்களிடம் முறையீடு செய்யலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.