மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. வந்தது மகிழ்ச்சி செய்தி…. CM விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வரவு-செலவுத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தடையின்றித் தொடர்வதுடன், புதிய அறிவிப்புகளுக்கான செலவினங்களை அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும், இந்த நிதியியல் சவால்களுக்கு இடையே, மகளிரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ‘மகளிர் உரிமைத் தொகை’யை ரூ.2,500 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.