கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதி வரம்புகளை மீறி முறைகேடாக ரூ.1,000 உரிமைத்தொகை பெறப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் களையெடுப்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்கள், கணிசமான நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் போன்ற தகுதியற்ற நநபர்களும் பயன் அடைந்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன் காரணமாக, இத்திட்டத்தை மேலும் பலருக்கு விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, பயனாளிகளின் தரவுகளைத் தரவுத்தளங்கள் மூலம் மீண்டும் சரிபார்த்து, விதிமுறைகளுக்குப் புறம்பாக நிதியுதவி பெறுவோரை நீக்கும் விரிவான சரிபார்ப்பு நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
