தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ், தற்போதைய முதலமைச்சர் விஜய் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முக்கிய அறிவிப்பு இன்றே வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்து வரும் நாள்களில் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டு வரும் இந்த உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்தப்பட உள்ளதால் தமிழகப் பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
