தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் எப்போது முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களுக்கு இடையே அதிகரித்துள்ள நிலையில், புதிய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகே பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னரே, உரிமைத்தொகை உயர்வும், புதிதாக யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, தகுதியான புதிய பயனாளிகள் மற்றும் கூடுதல் தொகையை எதிர்பார்க்கும் பெண்கள் அதுவரை சற்று பொறுமையுடன் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
