மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. உங்களுக்கு கிடைக்கவில்லையா..? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பயனாளிகளுக்கு தலா ₹5,000 வீதம் மொத்தம் ₹6,550 கோடி நிதி வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று (பிப். 13) அறிவித்தார். இந்தத் தொகையானது பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தலா ₹1,000 உரிமைத் தொகை (மொத்தம் ₹3,000) மற்றும் கோடைக்கால சிறப்பு நிதியுதவியாக ₹2,000 ஆகியவற்றை உள்ளடக்கியது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பலருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு குறைவாக உள்ள தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே இந்த ₹5,000 தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தகுதியிருந்தும் பணம் வராதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது KMUT அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.