வயலுக்குள் இருந்து திடீரென நிர்வாணமாக ஓடிவரும் ஆண்கள்… பணிக்கு வரும் பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

By Divyamayakannan on புரட்டாதி 7, 2025

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தௌராலா என்ற கிராமத்தில் நிர்வாண கும்பல் என அழைக்கப்படும் மர்ம நபர்களால் பீதியில் இருக்கும் கிராம மக்கள். விவசாய நிலங்களில் மறைந்த படி இருக்கும் நிர்வாண நபர்கள். தனியாக பெண்கள் யாரேனும் வயலுக்கு வந்தால் நிர்வாணமாக வெளியே வந்து அவர்களை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவம் நடந்ததாக உள்ளூர் பொதுமக்கள் கூறுகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்று வீடு திரும்பிய பெண் ஒருவர் பாராலா கிராமம் வழியாக வீட்டுக்கு சென்றிருந்தபோது. அந்தப் பெண்ணையும் வலிமறைத்து இரண்டு நபர்கள் தப்பாக நடக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது அப்பெண் கூச்சலிட்டதால் தப்பித்து ஓடிவிட்டனர். பாராள கிராமத்தில் உள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே நடுங்குகிறார்கள் என கிராம தலைவர் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் நியமிக்கப்பட்ட கிராமத்தை கண்காணித்து வருகிறார்கள். அதேபோல் ஸ்டோன்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் என்று காவல்துறை சார்பில் தகவல் வெளியாகிறது.