ஜெய்சால்மர், ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு பெண் ஒருவர் தனது சொத்தை பல்லை எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், அவசரகதியில் அப்பெண்ணுக்கு மரத்துப்போகும் ஊசியைச் செலுத்திவிட்டு, தவறாக நல்ல நிலையில் இருந்த மற்றொரு பல்லைப் பிடுங்கி எடுத்துவிட்டார்.
சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டிருந்த சொத்தைப் பல் அப்படியே இருப்பதையும், நல்ல பல் பிடுங்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான வலியையும் ஏமாற்றத்தையும் தாங்க முடியாத அந்தப் பெண், மருத்துவமனை வளாகத்திலேயே தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது நியாயத்தைக் கேட்கத் தொடங்கினார்.
