லண்டனில் ஜெயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தை காப்பகத்தில் பணியாற்ற 2 பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 17 வயது சிறுவனிடம் காப்பகத்தில் பணியாற்றி வரும் லின்டி லீ(44) மற்றும் மோர்கன் குவிக்லி (29) ஆகிய இரண்டு ஊழியர்களும் சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் செயலில் ஈடுபட தூண்டியுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான லிண்டி தன்னுடைய ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிந்தும் உள்ளாடை இல்லாத நிலையிலும் சிறுவனை கவருவதற்கு முயன்று பலமுறை அவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுவன் தனது தாயிடம் இது குறித்து கூறியுள்ளான். உடனே சிறுவனின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பெண் ஊழியர்களையும் கைது செய்தனர். சாட்சிகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தாயான லிண்டிக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
