ஆற்றில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தபோது… மீன் என நினைத்து தண்ணீருக்குள் கையை விட்ட பெண்… அடுத்த நொடியே காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

நதியில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக ஒரு முதலையைப் வெறும் கையால் பிடித்துத் தூக்கிய திகைப்பூட்டும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பெண் ஆற்றில் நிதானமாக குளித்துக் கொண்டிருந்தபோது, தனது காலடியில் ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர்ந்துள்ளார். அது ஏதோ மீன் அல்லது மரக்கட்டை என்று நினைத்த அவர், சற்றும் யோசிக்காமல் தண்ணீருக்குள் கையை விட்டு அதை அப்படியே மேலே தூக்கினார். ஆனால், கையில் வந்தது உயிருள்ள ஒரு முதலை என்பதை அறிந்ததும் அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு அதைத் தூக்கி எறிந்தார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Sintexto_ (@sintextomx)

முதலைக் குட்டியாக இருந்தாலும், அதன் வேகம் மற்றும் ஆக்ரோஷம் அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த முதலை கடிக்காததால் அவர் உடனடியாக நீந்திச் சென்று உயிர் தப்பினார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “யாருக்கு அதிக பயம் ஏற்பட்டிருக்கும்? அந்தப் பெண்ணுக்கா அல்லது முதலைக்கா?” என்று நகைச்சுவையாகவும் அதிர்ச்சியாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆபத்தான நீர்நிலைகளில் இறங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.