ஏற்கனவே 6 குழந்தை இருக்கு… கருத்தடை ஆபரேஷன் செய்ய சொன்ன மருத்துவர்கள்… பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 33 வயதான இவருக்கு திருமணம் ஆகி மங்கை என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆன நிலையில் 3 பெண் குழந்தைகள் இரண்டு குழந்தைகள் என மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளார்கள். இந்த நிலையில் ஆறாவதாக கர்ப்பம் தரித்த மங்கை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பயந்த மங்கை பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இது குறித்து கணவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் மங்கையிடம் காவல்துறையினர் நேரில் விசாரித்தனர். அப்போது உண்மையை கூறியுள்ளார். இதற்கிடையில் குழந்தை பால் குடிக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து தாயிடம் ஒப்படைத்துள்ளார்.