கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராம துர்கா தாலுக்கா கோனகனூர் கிராமத்தை சேர்ந்த தேமப்பா என்பவருடைய மனைவி நாகவியா வந்தமுரி(28). நாகவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மெகபூப் சாப் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த தேமப்பா தன்னுடைய மனைவியை கண்டித்தும் அவர் தனது கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. இதனைத் தொடர்ந்து கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் நாகவ்யா சென்றுவிட்டார்.
இருவரும் ராம துர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கள்ளக்காதலர் மதம் மாறும்படி நாகவ்யாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் மதம் மாறவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டியதால் இருவருக்கும் தினம்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மணமுடைந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
