“எனக்கு MLA சீட் வேணும்” TVK விஜய் தரமாட்டேங்குறாரு… நள்ளிரவில் 100-க்கு போன் செய்த பெண்.. கோவை போலீசாருக்கே ‘தண்ணி’ காட்டிய தனலட்சுமி..!!

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) நள்ளிரவில் வந்த ஒரு வினோத அழைப்பு போலீசாரையே திணறடித்தது. அதில் பேசிய பெண்மணி ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தனக்கு எம்.எல்.ஏ சீட் தர மறுப்பதாகவும், அதற்கு எதிராகப் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிப் புலம்பியுள்ளார். இந்தச் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அந்த அழைப்பு வந்த இடத்தை ஆய்வு செய்ததில் அது கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் பகுதி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 45 வயதான தனலட்சுமி என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. போதையின் உச்சத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அரசியல் கட்சியின் சீட் விவகாரத்திற்காக அவசர போலீஸ் எண்ணிற்கு அழைத்து அவர் புகார் அளித்தது போலீசாரை அதிருப்தியில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய எண்ணை இத்தகைய காரணங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது கண்டிக்கத்தக்க ஒன்றாக அமைந்தது.

   

இருப்பினும், இச்சம்பவம் குறித்துப் பேசிய தனலட்சுமி, தான் ஒரு மாற்றுத்திறனாளி என்றும், தவெக கட்சியில் இணையத் தான் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். தான் போதையில் இருந்ததாகப் போலீசார் கூறுவது பொய் என்று மறுத்த அவர், தனக்கு நியாயம் கிடைக்கவே அழைத்ததாகக் கூறினார். இறுதியில், தேவையில்லாத காரணங்களுக்காக அவசர எண்ணிற்கு அழைத்துத் தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் அவரை எச்சரித்துச் சென்றனர்.