அடவிப்பாங்களா… உங்கள சும்மா விடக்கூடாது… வண்டிய நிப்பாட்டுடா… எங்கே போறீங்க?… நடுரோட்டில் காரை மறித்து பெண்ணிடம் கொடூர தாக்குதல்… 9 பேர் மீது அதிரடி வழக்கு… கன்னடாவில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

தக்ஷிண கன்னடா மாவட்டம் கதபாவின் கொனாலு கொல்பே பகுதியில் நால்வரை மறித்து, தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியதாக ஒன்பது பேர் மீது உப்பினங்கடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 12 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து 18 வயதான ஃபைஸா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது பண முடித்து நண்பர்களான சிப்னான், ஜாஹிர் மற்றும் சபியா ஆகியோருடன் ஃபைஸா காரில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவரை வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, மற்ற மூவரும் கொனாலு கொல்பேவை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த நபர்கள் அவர்களின் காரை மறித்து, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வண்டி முன்னால் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

   

தகவலறிந்து ஃபைஸா, ஜமால் மற்றும் ஃபைஸாவின் தங்கையும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர்களையும் அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஜாபிர், சித்திக், உனைஸ், ரம்ஷிக், சம்சுதீன், ஜாஃபர், ஆஷித், அச்சுரு என்ற அஷ்ரஃப் மற்றும் அஷ்ரஃப் கொல்பே ஆகிய 9 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.