கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவர்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆடி 21, 2025

Spread the love

மராட்டிய மாநிலம் மும்பை 6 காலணி பகுதியில் கடந்த மார்ச் மாதம் அடையாளம் தெரியாதா ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் பிணமாக மீட்கப்பட்டவர் மும்பை கோரேகவ் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பதும் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்த போலீசார் சந்திரசேகரின் மனைவி ரஞ்சனா என்பவரை அழைத்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சந்திரசேகரின் மனைவி ரஞ்சனாவுக்கு ஷாருக் என்ற நபருடன் கள்ளக்காதல் இருந்தது. கணவர் இல்லாத நேரத்தில் ரஞ்சனா அவரை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இது குறித்து அறிந்த சந்திரசேகர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனா கணவரை தீர்த்து கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய நிலையில் சம்பவத்தன்று கள்ளக்காதலன் ஷாருக்கை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு தன்னுடைய கூட்டாளி மைனுதின் என்பவருடன் வந்த சாருக் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஆறே காலனி பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சனா மற்றும் அவருடைய கள்ளக்காதலர் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.