சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் தொழிலதிபருமான சுதா கார்த்திக் (44) என்பவர், ஆன்லைன் முதலீட்டு மோசடி குறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வாட்ஸ்அப் மூலம் இவரைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர், ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பேசியுள்ளார். அதை நம்பி சுதா கார்த்திக் ₹25 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
இப்புகாரின் பேரில், கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த ஆன்லைன் மோசடியில் முக்கியக் குற்றவாளியான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தீபா (26) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரியும் தீபா, மோசடி கும்பலுக்குத் துணையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்துச் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…