சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் தொழிலதிபருமான சுதா கார்த்திக் (44) என்பவர், ஆன்லைன் முதலீட்டு மோசடி குறித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வாட்ஸ்அப் மூலம் இவரைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர், ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பேசியுள்ளார். அதை நம்பி சுதா கார்த்திக் ₹25 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
இப்புகாரின் பேரில், கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த ஆன்லைன் மோசடியில் முக்கியக் குற்றவாளியான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தீபா (26) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரியும் தீபா, மோசடி கும்பலுக்குத் துணையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்துச் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…