“பக்கத்தில வந்தா குத்திருவேன்…” இரு கைகளில் கத்தியுடன் போலீசார் மீது பாய்ந்த பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இரு கைகளிலும் கத்திகளுடன் உலா வந்த பெண் ஒருவர், பாதசாரிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த நியூயார்க் போலீசார் அவரைச் சரணடையுமாறு எச்சரித்ததுடன் டேசரைக் கொண்டு கட்டுப்படுத்த முயன்றனர்.

இருப்பினும், அந்த பெண் கத்திகளுடன் போலீசாரை நோக்கிப் பாய்ந்ததால், அதிகாரிகள் அவரைச் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என்றும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேயர் ஜோஹ்ரன் மம்தானி தெரிவித்துள்ளார்.