என் பொண்ணு இல்லாம என்னால வாழ முடியாது.. மகள் இறந்த அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய தாய்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.

By Nanthini on ஆடி 15, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வரும் ரஜிதா ரெட்டி (58) என்பவருக்கு ஸ்ரீஜா ரெட்டி என்ற 24 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் நிலையில் ரஜிதாவின் கணவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாயும் மகளும் வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் ஸ்ரீஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமையல் செய்துவிட்டு படுக்கையறைக்குச் சென்ற ரஜிதா தனது மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். உடனே கணவரை தொடர்பு கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாகவும் மகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றும் ரஜிதா கூறியுள்ளார்.

உடனே கணவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் ரஜிதாவும் தூக்கில் பிணமாக தொங்கினார். தரையில் மகள் ஸ்ரீஜா உடல் இருந்ததும், ரஜிதாவின் கணவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் இறந்த துக்கத்தில் உடனே தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.