உல்லாசமாக இருந்தபோது தெரியவந்த உண்மை… 52 வயது காதலியை கொலை செய்த 26 வயது காதலன்… திடுக்கிடும் பின்னணி.. !

By Nanthini on புரட்டாதி 3, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அருண் (26) என்ற வாலிபருக்கு instagram மூலமாக ராணி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். பிறகு ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்துக் கொண்ட நிலையில் 52 வயதான ராணியை தன்னுடைய வயதை மறைத்து பில்டர் செயலி மூலமாக புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றியுள்ளார். காதல் மோகத்தில் இருந்த அருணால் ராணியின் வயதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் முதல்முறையாக சில மாதங்களுக்கு முன்பு ராணியை அருண் நேரில் சந்தித்தபோது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசமாக இருந்த சமயத்தில் ராணியின் நடவடிக்கையில் அருணுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவளுக்கு 52 வயது என்றும் நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆடிப் போன அருண் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்துள்ளார்.

   

கோபத்தை வெளிக்காட்டாமல் ராணியை ஏமாற்றி அவரிடமிருந்து 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை அருண் தூக்கி வீசி உள்ளார். ராணியின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்போது அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.