வரலாறு காணாத களையெடுப்பு… 20 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் காலி?… கட்சிக்குள் தொடங்கும் அடுத்தகட்ட அரசியல் யுத்தம்…!!

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில், கட்சியை மறுசீரமைக்கும் வகையிலும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளின்படி, கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பதவிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகபட்சமாக 70 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியும் என்ற புதிய விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகளால், கட்சியில் நீண்ட காலமாகப் பொறுப்பில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகளை அடுத்த 15 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 70 வயதைக் கடந்த 13 பேர் உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் தங்களது பதவிகளை இழக்க நேரிடும் எனத் தெரிகிறது. கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பதவி இழக்க வாய்ப்புள்ள மூத்த தலைவர்களின் பட்டியலில் பல முக்கிய அமைச்சர்களும் முன்னணி நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். வயது மற்றும் பதவிக்கால வரம்பின் அடிப்படையில் ஆவுடையப்பன், ஆர்.காந்தி, சாத்தூர் ராமச்சந்திரன், ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், சுந்தர், கோ.தளபதி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்த புதிய விதிகளுக்குள் வருகின்றனர். இதன் மூலம் கட்சியில் அடுத்த கட்ட தலைமுறைக்கு வழிவிடப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Gayathri

Recent Posts

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

11 minutes ago

கடவுளே… நூலிழையில் தப்பிய உயிர்… சாலையில் நடந்த கொடூர விபத்து… உறைந்துபோன வாகன ஓட்டிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…

16 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

24 minutes ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

30 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

41 minutes ago