FLASH NEWS: காலையிலேயே ஷாக் நியூஸ்… நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

Spread the love

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு துயரச் சம்பவமாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மன்னார் கடல் பகுதியில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இவர்களையும் இவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படை அதிரடியாகக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வலைகள் மற்றும் உடைமைகளுடன் மீனவர்கள் அனைவரும் மன்னார் மீன்வளத்துறை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடர் கைது நடவடிக்கைகள், பாக் ஜலசந்தி பகுதியில் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 4-ம் தேதிதான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த வடு ஆறுவதற்கு முன்பே, அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது அவர்களது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

மேலும் “கடலுக்குச் சென்றவர்கள் கரை திரும்புவார்களா?” என்ற ஏக்கத்துடன் மீனவப் பெண்கள் கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பதுடன், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நிரந்தர ராஜதந்திர தீர்வை காண வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது.

Rajeshwari

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago